Complaints regarding errors in deed registration began to pile up
பத்திரப்பதிவு குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள முக்கிய உத்தரவு..!
தமிழகத்தில் பத்திரப்பதிவு முழுமையாக இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை செய்துள்ளது அதன் அடிப்படையில் நிலங்கள்.
விற்பனை செய்வது, வாங்கப்படுவது நடைபெற்ற வருகிறது தற்போது அதில் தான் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது அதாவது பத்திரப்பதிவு நடைபெறும் பொழுது குறிப்பாக ஒரு நிலத்தைப் பற்றிய தகவல்களை எழுதும் போது.
அதில் பிழைகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது தற்போது இதில் தான் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு அதிகமான வேலைபாடு பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது அதாவது பட்டா பெயர் மாற்றுதல் இணையதளம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நீங்கள் பத்திர பதிவு செய்தால் பட்டா பெயர் மாற்றுதல் இணையதளம் மூலம் தானாகவே நடைபெறுவதற்கு தற்போது மென்பொருளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவில் நிலத்தைப் பற்றி தகவல்களை எழுதும் போது பல்வேறு பிழைகள் ஏற்படுகிறது இந்த பிழைகளால் தானாக பட்டா பெயர் மாறுதல் நடைபெறாமல் இருக்கிறது என பல்வேறு புகார்கள் குவிய தொடங்கியுள்ளது.
பத்திரப்பதிவில் எழுத்து பிழைகள், இனிஷியல் பிழைகள், உறவுமுறை பிழைகள் மற்றும் நம்பர் பிழைகள் இருப்பதால் வங்கிகளில் கடன் பெற முடியவில்லை எனவும் தொடர்ந்து குவிய தொடங்கியுள்ளது இதனால் தமிழக அரசு.
வருவாய் துறை அலுவலர்களுக்கு கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது பத்திரப்பதிவில் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்.
பிழைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என மனுக்கள் ஏராளமாக குவிந்துள்ளதால்,வருவாய்த்துறை அலுவலர்களுக்கு வேலை பளு கடுமையாக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்கள்
பத்திரப்பதிவு செய்யும் பொழுது நிச்சயம் அனைவருடைய ஆதார் கார்டு, புகைப்படம் போன்றவை இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அந்த நிலத்திற்கு எத்தனை வாரிசுகள் உரிமை இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான பட்டாக்கள் தயார் செய்ய முடியாத வகையில் இணையதளம் மூலம் பத்திரப்பதிவு நடைபெறுகிறது பத்திரப்பதிவு நடைபெற்றவுடன் இரண்டு நாட்களில் பட்டா பெயர் மாற்றுத்தலும் தானாகவும் நடைபெறும்.
குறிப்பாக முகூர்த்த நாட்களில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது போலியான பத்திரப்பதிவு செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவும் பத்திரப்பதிவில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |