ED says there has been corruption of over Rs 1000 crore in TASMAC
தமிழக டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான செய்தி..!
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஊழல் என்பது மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது டாஸ்மாக்கில் 1,000/- கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என அமலாக்கத்துறை அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3 நாட்களாக சோதனை நடைபெற்றது அதில் பல்வேறு ஆவணங்கள் ரொக்க பணம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் டாஸ்மார்க் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் இலக்க நிர்ணயித்து.
விற்பனை நடைபெறுகிறது குறிப்பாக 2021 ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செந்தில் பாலாஜி அவர்கள் மதுவிலக்கு துறை மற்றும் மின்சார ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு.
ஒவ்வொரு பாட்டில் மீதும் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூலித்து கொடுக்க வேண்டும் என டாஸ்மார்க் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இது குறித்து வீடியோக்களும் அவ்வப்போது வெளிவந்தது ஒரு கடைக்கு மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது மேலும் மது பிரியர்கள் மது வாங்கும் போது.
டாஸ்மார்க் ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்கும் வீடியோவும் வெளியிடப்பட்டது, இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அமலாக்கத்துறை டாஸ்மார்க் அலுவலகத்தில் சோதனை நடத்தியது.
சென்னை தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமராக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற.
இந்த சோதனை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் டெல்லியில் இதே போன்று மதுபான முறை கேட்டில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் தற்போது காணாமல் போய் உள்ளார்கள்.
மதுபான ஊழல் தொடர்பாக டெல்லியில் துணை முதலமைச்சர் பல மாதங்களாக சிறையில் இருந்தார்,டெல்லியில் முதலமைச்சரும் சிறையில் இருந்தார் 2025ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது ஆம் ஆத்மி கட்சி.
தற்போது தமிழகத்திலும் அதே போன்ற சூழ்நிலை நிலவுகிறது இந்த நிலையில் டாஸ்மாக்கில் 1,000/- கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக என்று அமலாக்குத்துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டிருப்பது டாஸ்மாக்கில் 1,000/- கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பல்வேறு தனியார் நிறுவனங்களும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது சோதனையில் 1,000/- கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மதுபானம் கொள்முதல் முதல் தனியார் மதுபான நிறுவனங்கள்.
முறை கேட்டில் ஈடுபட்டுள்ளது திட்டமிட்டு செலவுகள் அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிகள் விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடைபெற்றுள்ளது முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள்.
பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது டாஸ்மார்க் போக்குவரத்து ஒப்பந்தத்திலும் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது ஒரு லிட்டர் மீது 4 ரூபாய்..!
டாஸ்மார்க் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கி உள்ளது உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது முறையான விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.
முறையான KYC, பான் கார்டு விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட டெண்டர் வழங்கப்பட்டுள்ளது போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |